Blogger Widgets

Friday, July 6, 2012

Howto Block Any Website


Steps:

  • Open Run Menu & Paste %Windir%\System32\Drivers\Etc
  • Find The File Named "Hosts"
  • Open It In Notepad
  • Under "127.0.0.1 Localhost" Add 127.0.0.2 www.Google.com , And That Site Will No Longer Be Accessable.
  • Done!


-For Example-

127.0.0.1 Localhost
127.0.0.2 www.Google.com



-For More Than One Site To Block-

127.0.0.1 Localhost
127.0.0.2 www.Google.com
127.0.0.3 www.Google.co.in
127.0.0.4 Google.com
127.0.0.5 www.Yahoo.com
127.0.0.6 Yahoo.com
127.0.0.7 www.Orkut.com
127.0.0.8 Orkut.com
127.0.0.9 www.Youtube.com


By Useing C Language

You Can Done Above Job By Using C Language
First Download Block Website.c
Now Compile It
Now Run The program.


Saturday, June 9, 2012

என் காதலி









நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!

நினைவெல்லாம்




வெட்டிப்பயன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோ
தயக்கம் தடுக்கிறது
எங்கே நீ
என்னை கருதிவிடுவயோ
எருக்கம் பூவாய் என்று..............
என் பாதைகள் கூட
நீ இல்லாமல் பாலைவனம் போல் உள்ளதடி...
முடிவில்
உன் தொல்லைகள் தாங்காமல்
உன்னை நினைத்து விஷம் அருந்தலாம் என்றாலோ 
உன் வார்த்தைகளை போல் தித்திக்கிறதே........
தூக்கு போடலாம் என்றாலோ
உன் கூந்தல் என் ஞாபகத்திற்கு வந்து தடுக்குதடி......
நீரில் மூழ்கி இறந்து விடலாம் என்றாலோ
உன் கொலுசு ஒலி சத்தம் கேட்கிறதே.......
இறுதில் இறக்கவும் முடியவில்லை 
உன்னை இறுக்கமாக அணைக்கவும் முடியவில்லை.......
எதிலும் நீயே தெரிகிறாய்
என்
நினைவெல்லாம் நீயே வாழ்கிறாய்....

உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்




யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்..

ஒருதலைக் காதல்




காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை...!

காதல் ஏக்கம்



உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!

கண்டதும் காதல்





முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

கனவில் என் வாழ்க்கை







பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!